தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப் பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கல் கிசை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கல்கிஸ்ஸ பதில் நீதிவான் ஷாந்த குமார இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாய பகுதியில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து நேற்று முன் தினம் கைது செய் யப்பட்ட துமிந்த திஸாநாயக்கவை நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்து மேலதிக விசாரணை அறிக்கையை முன்வைத்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், அவரை 4ஆவது சந்தேக நபராக மன்றில் ஆஜர் செய்வதாக கூறினர்.
அத்துடன் 3 ஆவது சந்தேக நபரான அவரது சமையற்காரரான ஹேமந்த ஊடாக துமிந்த திஸாநாயக்க முதல் இரு சந்தேக நபர்களான 68 மற்றும் 40 வயது டைய பெண்களிடம் இந்த துப்பாக் கியை வழங்கியுள்ளமை தொடர்பில் விசார ணையில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்
5ஆம் திகதி வரை திகதி வரை விளக்கமறியலில் வைக்க அவர்கள் கோரினர். எனினும் மன்றில் ஆஜர் செய்ய முன்னர் துமிந்த திஸாநாயக்க சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர் செய்யப்பட்டதாகவும், இதன்போது அவருக்கு சுகவீன நிலைமை இருப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகவும், அதனால் அவருக்குக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க உத்தரவிடுமாறும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கோரினர்.
இதன்போது, சந்தேக நபரான துமிந்த திஸாநாயக்கவின் தரப்பில் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
முதலில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, 4 ஆம் சந்தேக நபரான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன என மன்றில் கேள்வி எழுப்பியதுடன், சந்தேகநபர் ஒருவரின் வாக்கு மூலம் ஒன்றை மாத்திரம் அடிப்படையாக வைத்து ஒருவரைக் கைது செய்து விட்டு விளக்கமறியலில் வைக்கக் கோருவது நியாயமில்லையென வாதிட்டார்.
இதன்போது துமிந்த திஸாநாயக்கவை துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் மன்றில் ஆஜர் செய்வதாக பயங் கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரி வினர் கூறினர்.
அதனை பதிவு செய்யக் கோரிய ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், 4 ஆம் பிரதி வாதிக்கு எதிராக சுயாதீனமான சாட்சியங்கள் இருக்கின்றதா என கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் பதில் நீதிவான் சாந்த குமாரவும் கேள்வி எழுப்பிய நிலையில், சந்தேக நபர்களின் வாக்கு மூலங்கள் மட்டுமே சாட்சியங்களாக இருப்பதாகவும், இதுவரை வேறு சாட்சியங்கள் இல்லை எனவும் பதிலளித்தனர் .
இதனையடுத்து மஹனாம் திலகரத்னவின் வழக்குத் தீர்ப்பை முன்னிறுத்தி ஜனாதி பதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதிட்ட நிலையில் தனது சேவை பெறுநரின் உடல் நிலை குறித்த சட்ட வைத்திய அறிக்கை அவரது பொறுப்பில் இந்த துப்பாக்கி இருக்காமை தொடர்பிலான விடயங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென மன்றைக் கோரினார்.
இதன்போது விசாரணை அதிகாரிகள், 3 ஆவது சந்தேக நபரான சமையற்காரர் ஹேமந்த ஊடாக துமிந்த திஸாநாயக்க முதல் இரு சந்தேக நபர்களுக்கும் இந்த 56 ரக துப்பாக்கியை வழங்கியுள்ளமை என்மை தொடர்பில் விசாரணையில் தெரிய வந்ததாக கூறினர்.
இதன்போது நீதிவான், அதனை 4 ஆம் சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளாரா எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த விசாரணை அதிகா சிகள், 4ஆம் பிரதிவாதியின் தந்தையின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் இந்த துப்பாக்கி இருந்தமை குறித்து சந்தேக நபர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறினர்.
எனினும் 3 ஆவது சந்தேக நபர் ஊடாக
துமிந்த திஸாநாயக்க முதல் இரு சந்தேக நபர்களுக்கும் இந்த துப்பாங்கியை வழங்கியதாக கூறப்படுவதை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி சட்டத்தர ணிகளான பைசர் முஸ்தபா மற்றும் சம்பத் மெண்டிஸ் ஆகியோர் மன்றில் பிரஸ்தாபித் தனர்.
இதன்போது இந்த விசாரணைகள் இன்னும் முடியவில்லை என சுட்டிக்காட்டிய விசாரணை அதிகாரிகள், இவ்வாறு இவர்கள் ஊடாக இந்த தானியக்க துப்பாக்கியான 58 ரக துப்பாக்கி அடங்கிய பையை வழங் கிவிட்டு, அது குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த பொதியை பத்திர மாக வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பில் பிரபல தனியார் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்திடம் அறிக்கை பெற வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளதாகவும், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரின் அதிகாரத்துக்கு அமையவும் அது குறித்த தொலைபேசி தரவுகளை பெற்று பகுப்பாய்வு செய்து வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறினர்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை அரசு இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக அவர்கள் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சந்தேக நபர் ஒருவர் கூறும் விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை கைது செய்யும் நிலைமை மிக ஆபத்தானது என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, கல்கிஸ்ஸ நீதிவான் முன்னிலையில் இவ்வழக்கை அழைக்கவும் பிணை கோரிக்கை முன் வைக்கவும் குறுகிய தினமொன்றைக் கோரினார்.
இவ்வழக்கு பதில் நீதிவான் முன்னி லையில் விசாரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இதனை கோரினார்.
இதன்போது, துப்பாக்கி அடங்கிய பையை வழங் கிவிட்டு, அது குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த பொதியை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு முன் வைத்த விடயத்தை தான் முற்றாக மறுப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் கூறினார்
இந்த நிலையிலேயே முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கல்கிஸ்ஸ பதில் நீதிவான் ஷாந்த குமார 4 ஆவது பிரதிவாதி குறித்து பிணை விண்ணப்பம் செய்ய இவ்வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டதுடன், அதுவரை அவை விளக்கமறியலில் வைக்க பணித்தார்.
சந்தேக நபருக்கு சுகவீன நிலைமை இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி சான்றிதழ் அளித்துள்ள நிலையில் அவருக்கு சிறைச்சாலை வைத்தியசலையில் நீதிவான் ஆலோசனை வழங்கினர்.
இதனையடுத்து பயடுத்து துமிந்த திஸாநாய சிறைச்சாலை பஸ் வண்டியில் புதிய மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.